வாலிபருடன் ஏற்பட்ட பழக்கம்…. மாயமான 14 வயது சிறுமி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூரில் ராஜேஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். வேலை காரணமாக அடிக்கடி ராஜேஷ் அன்னூர் பகுதிக்கு சென்று வருவது வழக்கம். அப்போது அன்னூர் பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14…

Read more

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை…. குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆழியாறில் குரங்கு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக இந்த அருவியில் நீர்வரத்து உள்ளது. கடந்த ஜனவரி மாதம் நீர் வரத்து இல்லாததால் நீர்வீழ்ச்சி மூடப்பட்டது. கடந்த…

Read more

மூளைச்சாவு அடைந்த ஐ.டி ஊழியர்…. உடல் உறுப்புகள் தானம்…. மறுவாழ்வு பெற்ற 6 பேர்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் மணிகண்ட பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி இரவு மணிகண்ட பிரபு பாப்பாரப்பட்டி சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை ஸ்ரீவில்லிபுத்தூர்…

Read more

பேருந்து கூரை மீது ஏறி ரகளை செய்த மாணவர்கள்…. 7 நாட்கள் போக்குவரத்தை சீர் செய்ய உத்தரவு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூரில் இருந்து வள்ளலார் நகர் வரை தடம் எண் 56 ஏ கொண்ட பேருந்து இயக்கப்படுகிறது. கடந்த 22-ஆம் தேதி பேருந்து வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சென்றது. அப்போது தியாகராஜ கல்லூரியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள்…

Read more

நூதன முறையில் கல்லூரி மாணவரிடம் ரூ.18 லட்சம் மோசடி…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொடியம் கிராமத்தில் கமல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் எம்.பார்ம் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கமலின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலையில் குறைந்த முதலீடு…

Read more

8-ஆம் வகுப்பு மாணவியுடன் பழக்கம்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அதே பகுதியைச் சேர்ந்த தரணிதரன்…

Read more

சொத்தில் பங்கு கொடுக்காத அண்ணன்…. மருத்துவ கல்லூரி காவலாளி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.மருதூர் பகுதியில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதகடிப்பட்டில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு 2 1/2 வயதில் ரக்சன் ராம்…

Read more

இரு தரப்பினர் இடையே மோதல்…. 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை பாலசுப்பிரமணியம் தெருவில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த வள்ளி என்ற மனைவி உள்ளார். ஆனந்தவள்ளி அப்பகுதியில் இருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது அண்ணன் மகன் முருகன் மது குடித்துவிட்டு அப்பகுதியில்…

Read more

தீயை அணைக்க முயன்ற ஊராட்சி ஊழியர்…. மின்சாரம் பாய்ந்து பலி…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லாமேடு பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கண்ணுக்குழி ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இயக்கும் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பழனிச்சாமியின் வீட்டிற்கு அருகே உள்ள மின் கம்பி அறுந்து…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த நபர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தனாம்பட்டியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பிரபு உள்பட 11 பேரிடம் பணம் வாங்கியுள்ளார். அவர்கள் கொடுத்த 40…

Read more

ஓட ஓட விரட்டி கடித்த கதண்டுகள்… 26 தொழிலாளர்கள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசத்தம்மன் கோவில் அருகே 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நீர்வரத்து வாய்க்கால் கரைகளில் இருந்த கதண்டுகள் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டி கடித்தது. இதனால் பிரேமா, சரஸ்வதி, மணி உள்பட…

Read more

குற்றாலத்தில் குளுகுளு சீசன்…. அருவிகளில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக இருக்கிறது. நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இதனையடுத்து இரவு 10 மணிக்கு வெள்ளப்பெருக்கு…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவாடானை பகுதியில் காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டுக்கோட்டையில் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று காளிதாஸ் திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் துவரங்குறிச்சி முக்கூட்டு…

Read more

வீட்டிற்கு நடந்து சென்ற சிறுவன்…. கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பலி…. கதறும் பெற்றோர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பவனமங்கலம் மெயின் ரோடு பகுதியில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்பியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஓவியா என்ற மகளும், கவிபாலன் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் கவி பாலன் ஒன்றாம் வகுப்பு…

Read more

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி…. ரூ.4 லட்சம் மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆர்.எம்.எஸ் காலனியில் பாரதி கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் இடை தரகராக வேலை பார்த்து வருகிறார். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் நியூ லைட் ட்ராவல்ஸ்…

Read more

குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…. மனைவி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் தெற்கு தெருவில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முக லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று வடிவேல்…

Read more

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமி…. துரிதமாக செயல்பட்ட அரசு டாக்டர்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி காமனேரி பகுதியில் கூலி வேலை பார்க்கும் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேபி ஷாலினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் 9 வயது மகள் நேகா அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து…

Read more

5 குட்டிகளை ஈன்ற ஆடு…. ஆர்வமுடன் பார்த்து சென்ற கிராம மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பூதன் வளவு கிராமத்தில் அடைக்கன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சரசு என்ற மனைவி உள்ளார். இவர்கள் விவசாயம் செய்து வருவதோடு வீட்டில் ஆடுகளையும் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் சரசு வளர்த்து வந்த ஆடு வழக்கத்திற்கு மாறாக…

Read more

விஷம் கலந்த உணவை தின்ற நாய்கள் இறப்பு…. பெண்கள் உள்பட 5 பேர் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உய்யக்கொண்டான் காலனி பகுதியில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் விலங்குகள் நல வாரியத்தை சேர்ந்தவர். இந்நிலையில் கவிதா கணேஷ் நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது வீட்டிற்கு அருகே இரண்டு…

Read more

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. தொழிலதிபருக்கு ரூ.36 3/4 லட்சம் இழப்பீடு…. நீதிமன்றம் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் தொழிலதிபரான குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் 75 லட்சம் ரூபாய்க்கு ஒரு காரை விலைக்கு வாங்கினார். கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஆண்டு பிரிமீயமாக 2 லட்சத்து…

Read more

நண்பர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய நபர்…. மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பீ.பி குளம் வைகை மூவேந்தர் நகரில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பால்ராஜ் என்ற நண்பர் உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று இருவரும் முல்லை நகரில் இருக்கும் மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது ரஞ்சித்…

Read more

17 வயது சிறுமியுடன் நட்பு…. திருமணமானவர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கனூர் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்து 7 மாதங்களுக்கு முன்பு ரங்கசாமியின் மனைவி பிரிந்து சென்றார். இதனையடுத்து ரங்கசாமி 17 வயது சிறுமியுடன் நட்பாக பழகி வந்தார். கடந்த ஜூன் மாதம் சிறுமி பேருந்துக்காக…

Read more

10 மாத பெண் குழந்தையை தவிக்க விட்டு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோட்டுபட்டியில் கூலி வேலை பார்க்கும் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா(26) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்து பத்து மாதமே ஆன பெண் குழந்தை இருக்கிறது. தற்போது சத்யா குண்டியால்நத்தம் கிராமத்தில் இருக்கும்…

Read more

சாக்லேட் வாங்கி தருவதாக கூறி…. மாற்றுத்திறனாளி சிறுமிக்கு தொந்தரவு…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தக்கட்டி காலனியில் கூலி வேலை பார்க்கும் திம்மராயன்(43) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு திம்மராயன் அஞ்செட்டி அருகே இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத காது…

Read more

1000 ரூபாய் லஞ்சம்…. மின்வாரிய ஊழியருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்திலுள்ள லட்சுமணம்பட்டியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பெயரில் இருக்கும் 2.5 ஏக்கர் விவசாய நிலத்திற்கு சுயநிதி முன்னுரிமை திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில்…

Read more

பேருந்து நிறுத்தம் அருகே தீ விபத்து…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மரவாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களும், வியாபாரிகளும் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். மேலும் விவசாயிகள் கால்நடைகளுக்கு தீவனமாக போடப்பட்டு பின்னர் மாட்டு தொழுவத்தில் கிடந்த கழிவுகளையும் தினசரி வந்து அங்கு கொட்டி செல்கின்றனர். அங்கு குப்பைகள் மலை…

Read more

கையில் துப்பாக்கியுடன் சென்ற வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இறையூர் கிராமத்தில் இருந்து அதையூர் செல்லும் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காட்டு கோவில் பகுதியில் ஒருவர் கையில் நாட்டுத் துப்பாக்கியுடன் நடந்து சென்றுள்ளார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில்…

Read more

“உணவு, தண்ணீர் இன்றி 2 நாட்கள்”…. கிணற்றுக்குள் தவித்த முதியவர் உயிருடன் மீட்பு….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனிச்சாமி நடந்து சென்ற போது அந்த பகுதியில் இருக்கும் 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தார். அந்த கிணற்றில் 20 அடிக்கு…

Read more

லஞ்சம் கேட்டு டிரைவர் மீது தாக்குதல்.. வனத்துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பண்ணாரியில் வனத்துறை, போலீஸ் துறை மற்றும் வருவாய் துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்குவரும் வாகனங்களை வனத்துறையினர் சோதனை செய்தும், நுழைவு கட்டணம் வசூலித்தும் அனுப்புகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பண்ணாரி சோதனை சாவடி வழியாக…

Read more

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. டிரைவருக்கு 5 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றம் அதிரடி…!!

கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் கடந்த ஆண்டு மே மாதம் ரயிலில் எஸ்வந்த்பூருக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு ரயில் நிலையத்தை கடந்து சேலம் நோக்கி சென்ற போது…

Read more

10 பேரின் வங்கி கணக்கில் போலியான நகை…. ரூ.41 3/4 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர்…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி காளியண்ண வீதியில் அங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கவுந்தப்பாடியில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தற்காலிக நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அங்கமுத்து தனக்கு தெரிந்த 10 பேரை சந்தித்து எனக்கு…

Read more

பேருந்து நிறுத்தத்தில் இரு கல்லூரி மாணவர்களுக்கிடையே திடீர் மோதல்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி ஓமந்தூரார் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நேற்று பேருந்து வந்து இறங்கியது. அப்போது இரு கல்லூரி மாணவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது பேருந்தையும் போகவிடாமல், பொதுமக்களையும் பேருந்தில் ஏற, இறங்க விடாமல் மாணவர்கள் தகராறு…

Read more

கல்லூரி மாணவர் தற்கொலை…. முதற்கட்ட விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் காந்திநகர் அறிஞர் அண்ணா முதல் தெருவில் அந்தோணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு அருள் ஆனந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மதுரவாயலில் இருக்கும் தனியார் கல்லூரியில்…

Read more

சென்னை விமான நிலையத்தில் “தாலியை கழற்ற சொன்னார்கள்”…? மலேசிய பெண் வெளியிட்ட வீடியோ…!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு கடந்த வாரம் மலேசியாவில் இருந்து ஒரு தம்பதி ஆன்மீக சுற்றுலா வந்தனர். அந்த தம்பதியினர் குடியுரிமை சோதனை முடிந்ததும் உடைமைகளை எடுக்க சுங்க பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் நீங்கள் இந்திய சுங்க…

Read more

வானில் வட்டமடித்து தாழ்வாக சென்ற ராணுவ ஹெலிகாப்டர்…. பழனியில் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் விமான பயிற்சி பள்ளியில் இருந்து பழனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அவ்வபோது பயிற்சி விமானங்கள் பறந்து செல்லும் கடந்து. சில நாட்களுக்கும் முன்பு சாகசம் செய்தபடி மூன்று போர் விமானங்கள் அதிக சத்தத்துடன் சென்றது. நேற்று…

Read more

விஷ வாயு தாக்கி அடுத்தடுத்து மயங்கிய தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொன்மாந்துறை புதுப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு பகுதியில் இருக்கும் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ராஜபாளையத்தை சேர்ந்த வெங்கட்ராமன்,…

Read more

பெற்றோரை பார்க்க சென்ற மகன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கே.வேட்ரப்பட்டி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கட்ராமன் பெற்றோரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றார். இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த…

Read more

கல்லூரி மாணவிகளிடம் ரூ.31 லட்சம் மோசடி…. விடுதி கார்டன், கணவருக்கு வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் இருக்கும் தனியார் மாணவிகள் விடுதியில் 60 மாணவிகள் தங்கி இருக்கின்றனர். இங்கு சுகிர்தா என்பவர் வார்டனாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ஜெயக்குமார் டிரைவராக இருந்தார். சுகிர்தாவை பிரபு என்பவர் வார்டன்…

Read more

“கணக்கு பாடம் படிக்க கஷ்டம்”…. வீட்டை விட்டு வெளியேறிய 2 சிறுமிகள் மீட்பு…. போலீஸ் நடவடிக்கை…!;

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் வடலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் பள்ளி சீருடையிடன் சுற்றி திரிந்ததை பார்த்தார். உடனடியாக அந்த சிறுமிகளை அழைத்து விசாரித்தார்.…

Read more

மக்களே உஷார்…! இன்ஜினியரிடம் ரூ.9 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி விஷ்வந்தபுரத்தில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனோகரனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி…

Read more

கருவை கலைக்க சொல்லி மிரட்டல்…. ஐ.டி பெண் ஊழியர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 26 வயதுடைய இளம்பெண் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, நான் கோவை பீளமேட்டில் இருக்கும் தொழில்நுட்ப பூங்காவில் வேலை பார்த்து வருகிறேன். இன்ஸ்டாகிராம் மூலம் கடல் சில…

Read more

ஜவுளி எடுக்க சென்ற இன்ஜினியர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவுடையானூர்- பொடியனூர் மேலத்தெருவில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்குமார்(20) என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரான ராஜேஷ்குமார் ஜவுளி எடுப்பதற்காக தென்காசிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ராமச்சந்திரபட்டணம் பகுதியில் இருக்கும்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. படுகாயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை மருதூர்பட்டி மண்டபம் தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி, அவரது மகன் பெரியநாயகம், மாரிமுத்து ஆகிய மூன்று பேரும் ராமநாதபுரம் பகுதியில் இருக்கும் தனியார் ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த டிராக்டர்…. படுகாயமடைந்த டிரைவர்…. அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல உளூர் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் அசோக்குமார் பட்டுக்கோட்டை தஞ்சை பிரதான சாலையில் டாக்டரை ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சைக்கு சென்ற தனியார் பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது கட்டுப்பாட்டை…

Read more

மனைவி, மாமியார் மீது தாக்குதல்…. கொத்தனார் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சீனிவாசநல்லூர் கீழத்தெருவில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக இருக்கிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு…

Read more

“என்னை விரட்டி விட்டார்கள்”…. தற்கொலைக்கு முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க வந்த 42 வயது மதிக்கத்தக்க பின் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி…

Read more

சீட்டு நடத்தி ரூ. 1 1/2 கோடி மோசடி…. தம்பதி உள்பட 5 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பூதிபுரம் பகுதியில் தீபாவளிச்சீட்டு, ஏலச் சீட்டு, குலுக்கல் சீட்டு நடத்தி சிலர் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்…. தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வீர சின்னம்பட்டியில் சோனையன்(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சோனையன் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சோனையனை கைது செய்தனர்.…

Read more

பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 4 மாத ஆண் குழந்தை…. நள்ளிரவில் கடத்தி சென்ற பெண்…. பேருந்து நிலையத்தில் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் ஊசி, பாசிமாலை போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் இரவு நேரம் பேருந்து நிலையத்திலேயே படுத்து தூங்குகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்துராஜ் என்பவர் தனது மனைவி மற்றும்…

Read more

ஹோட்டல் ஊழியர் மீது தாக்குதல்…. சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி புறவழிச்சாலையில் இருக்கும் ஹோட்டலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு ஹோட்டலுக்கு 3 பேர் சாப்பிடுவதற்காக சென்றனர். அப்போது சரவணன் உணவு முடிந்து விட்டதாக தெரிவித்தார்.…

Read more

Other Story