தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ பதவிகள்) முதன்மைத் தேர்வுக்கான முடிவுகளை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22, 2026 மற்றும் மார்ச் 15, 2026 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்ற இந்த முதன்மைத் தேர்வுக்கான மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைப் பட்டியல் தற்போது தேர்வாணையத்தால் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் தேர்வை எழுதிய விண்ணப்பதாரர்கள் தங்களின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை நிலவரங்களை டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவு எண்களைப் பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
