திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசத்தம்மன் கோவில் அருகே 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நீர்வரத்து வாய்க்கால் கரைகளில் இருந்த கதண்டுகள் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டி கடித்தது. இதனால் பிரேமா, சரஸ்வதி, மணி உள்பட 26 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா அரசகுமார் காயமடைந்த தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை முடிந்து தொழிலாளர்கள் வீடு திரும்பினார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.