திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தனாம்பட்டியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பிரபு உள்பட 11 பேரிடம் பணம் வாங்கியுள்ளார். அவர்கள் கொடுத்த 40 லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு ரவிக்குமார் பணத்தை மோசடி செய்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரவிக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த துறையூர் நீதிமன்றம் ரவிக்குமாருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.