சென்னையை அடுத்த மீஞ்சூர் டிஎச் சாலை காந்தி ரோடு பகுதியில் இன்று அதிகாலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய தலை மற்றும் கையை துண்டித்து விட்டு உடலை மட்டும் துணியால் சுற்றி சாலையில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் மீஞ்சூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பிறகு காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டது அஸ்வின் குமார் என்பது தெரியவந்தது.

இவர் பொன்னேரியை எடுத்த வஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் ஒரு பிரபல ரவுடி. இந்நிலையில் அஸ்வினை நேற்று மாலை அவருடைய நண்பர் அஜய் அழைத்து சென்றது தெரிய வந்ததால் அவரை தற்போது காவல்துறையினர் வலை வீசி தேடி வருகிறார்கள். அவர் பிடிபட்டால்தான் அஸ்வின் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவரும். மேலும் அவருடைய தலை பெருங்காவூர் காலனி சுடுகாட்டில் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இந்த தலையை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் வேறு ஒரு இடத்தில் வாலிபரை கொடூரமாக கொலை செய்துவிட்டு  நடுரோட்டில் உடலை போட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.