வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசவன்புதூர் பகுதியில் பிரதீப் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கே.வி குப்பம் சட்டமன்ற தொகுதியின் அமமுக பொறுப்பாளராக இருக்கிறார். இவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு லிஷா (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தம்பதிகளுக்கு இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று சம்பவ நாளிலும் கணவன் மனைவிக்கு இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த லிஷா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் லிஷாவை மீட்டு மருத்துவமனைக்கு கிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இந்நிலையில் தன் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கே.வி குப்பம் காவல் நிலையத்தில் லிஷாவின் தந்தை புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.