சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பதட்டமாக இருப்பதாக சென்னை அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது ஒரு கட்டத்தில் லக்னோ வெற்றியை நோக்கி சென்றது. இதனால் பதற்றம் அடைந்த கேப்டன் ருதுராஜ் பீல்டிங் மற்றும் பௌலிங் மாற்றம் குறித்து தோனியிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

தோனியும் அவருக்கு ஆலோசனை வழங்கிய நிலையில் இனி இது போன்று அடுத்த முறை என்னிடம் ஆலோசனை கேட்க வேண்டாம் என ருதுராஜிடம்  கூறியுள்ளார். ஏனெனில் கடினமான சூழ்நிலைகளில் கேப்டன் தன்னிச்சியாக முடிவெடுத்தால் தான் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும். இதை மனதில் வைத்து தான் இனி வரும் போட்டிகளில் என்னிடம் ஆலோசனை கேட்க வேண்டாம் என ருதுராஜிடம் தோனி கூறியுள்ளார். மேலும் அவரையே இனி முடிவெடுக்க சொல்லிவிட்டு கடைசியாக ஒருமுறை மட்டும் தோனி ருதுராஜுக்கு அட்வைஸ் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.