ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக போட்டி சம்பளத்தில் பத்து சதவீதத்தை அபராதமாக செலுத்துமாறு மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் இஷான் கிஷனுக்கு பிசிசிஐ உத்தரவிட்டு உள்ளது. DC அணிக்கு எதிரான ஆட்டத்தில் அம்பயரின் முடிவை கிஷன் எதிர்த்ததை தொடர்ந்து நடத்தை விதி பிரிவு 2.2 இன் கீழ் லெவல் 1 குற்றத்திற்காக அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குற்றத்திற்கான அபராதத்தை கட்ட அவர், ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.