திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லாமேடு பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கண்ணுக்குழி ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இயக்கும் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பழனிச்சாமியின் வீட்டிற்கு அருகே உள்ள மின் கம்பி அறுந்து வேலி மீது விழுந்து தீப்பிடித்தது. இதனை பார்த்த பழனிச்சாமி மின்கம்பி அறுந்து விழுந்ததை கவனிக்காமல் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றார்.

அப்போது மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பசு மாடு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.