கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இறையூர் கிராமத்தில் இருந்து அதையூர் செல்லும் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காட்டு கோவில் பகுதியில் ஒருவர் கையில் நாட்டுத் துப்பாக்கியுடன் நடந்து சென்றுள்ளார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த லியோ பிரகாஷ் என்பது தெரியவந்தது. அவர் அப்பகுதியில் இருக்கும் காப்பு காட்டில் வனவிலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாட சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.