கரூர் மாவட்டத்தில் உள்ள மரவாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களும், வியாபாரிகளும் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். மேலும் விவசாயிகள் கால்நடைகளுக்கு தீவனமாக போடப்பட்டு பின்னர் மாட்டு தொழுவத்தில் கிடந்த கழிவுகளையும் தினசரி வந்து அங்கு கொட்டி செல்கின்றனர். அங்கு குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது.

நேற்று குப்பை கழிவுகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து வீடுகளுக்கும் விவசாயத் தோட்டங்களுக்கும் பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.