சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவாடானை பகுதியில் காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டுக்கோட்டையில் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று காளிதாஸ் திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் துவரங்குறிச்சி முக்கூட்டு சாலை பகுதியில் சென்றபோது காளிதாஸ் எதிர்பாராதவிதமாக பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காளிதாஸ் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.