உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் மாமியார் மற்றும் மருமகள்களுக்கு இடையே அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மற்றும் நெஞ்சை உலுக்கும் குடும்ப சண்டை வீடியோ தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும் ஆன்லைன் நுகர்வோர் மத்தியிலும் மிகப்பெரிய புயலையும் அதிர்ச்சி அலையையும் கிளப்பியுள்ளது. உத்தரப் பிரதேசம், உன்னாவ் (Unnao) மாவட்டத்தின் பீகார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தேவ்ரானி (மைத்துனி),கொழுந்தியாள் மற்றும் அவர்களது மாமியார் ஆகிய மூவருக்கும் இடையே கடுமையான குடும்பக்  பரஸ்பர மனஸ்தாபம் காரணமாக திடீரெனப் பயங்கர கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது.

‘NCMIndia Council For Men Affairs’ என்ற எக்ஸ் (X) கணக்கில் பதிவிடப்பட்டுள்ள இந்த விபரீத வீடியோவில், அந்தப் பெண்கள் எவ்வித அச்சமும் இன்றி ஒருவருக்கொருவர் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு கொடூரமாகத் தாக்கிப் பளார் பளாரென்று அடித்துக் கொள்கின்றனர்.

அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அலறியபடி ஓடிவந்து இந்த மெகா சண்டையை நிறுத்த முயன்ற போதிலும், அந்தப் பெண்கள் சற்றும் பின்வாங்காமல் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர்.

இந்த மோதலின் போது, மருமகள்களுக்கு இடையே நடந்த பயங்கர சண்டையை விலக்கி விடுவதற்காக வந்த வயதான மாமியாரையும் அந்த மருமகள்கள் இரக்கமின்றி வெளுத்து வாங்கியதில், அந்தப் பாட்டி படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விபரீத வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி ஆண்களையே மரண பயத்தில் ஆழ்த்திய நிலையில், உஷாரான உன்னாவ் மாவட்ட போலீசார், பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் சண்டையிட்டுக் கொண்ட அந்தப் பகுதியில் உள்ள 4 பெண்கள் மீது அதிரடியாகப் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த மெகா சண்டைச் செய்தி தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாக்களிலும் பயங்கரமாக ட்ரெண்டாகி, “குடும்பச் சண்டை வரலாம் பாஸ், அதுக்காக விலக்க வந்த வயசான மாமியார்னு கூடப் பார்க்காம இப்படி கொடூரமா அடிப்பாங்களா.. நிஜமாவே நெஞ்சு பதறுது!” என்று நெட்டிசன்கள் மத்தியில் அடுக்கடுக்கான கமெண்ட்டுகளுடன் இணையத்தில் பயங்கரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.