திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பூதிபுரம் பகுதியில் தீபாவளிச்சீட்டு, ஏலச் சீட்டு, குலுக்கல் சீட்டு நடத்தி சிலர் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பூதிபுரம் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்களிடம் சீட்டு நடத்தி சுமார் 1 1/2 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பூதிபுரத்தைச் சேர்ந்த சுகன்யா, தினேஷ், பொன்ராஜ், ஆறுமுகம், அவரது மனைவி பரமேஸ்வரி ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர். மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.