திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வீர சின்னம்பட்டியில் சோனையன்(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சோனையன் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சோனையனை கைது செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சோனயனுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மூன்று லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.