சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க வந்த 42 வயது மதிக்கத்தக்க பின் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றினர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் காரைக்குடி சூடாமணிபுரத்தைச் சேர்ந்த விமல்(42) என்பது தெரியவந்தது. இவரது கணவர் அமிர்தராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். குடும்ப தகராறில் விமலை அவரது மாமியார் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலில் தீக்குளிக்க முயன்றதாக விமல் தெரிவித்தார். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அந்த பெண்ணை அழைத்து விசாரித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.