திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை மருதூர்பட்டி மண்டபம் தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி, அவரது மகன் பெரியநாயகம், மாரிமுத்து ஆகிய மூன்று பேரும் ராமநாதபுரம் பகுதியில் இருக்கும் தனியார் ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மேல கடையநல்லூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் இவர்களது மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் மாரிமுத்து, பெரியநாயகம், முனியாண்டி ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.