தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல உளூர் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் அசோக்குமார் பட்டுக்கோட்டை தஞ்சை பிரதான சாலையில் டாக்டரை ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சைக்கு சென்ற தனியார் பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் பேருந்து மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. மேலும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீதும் மோதி சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அசோக் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய தனியார் பேருந்து, டிராக்டர், கார் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.