தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவுடையானூர்- பொடியனூர் மேலத்தெருவில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்குமார்(20) என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரான ராஜேஷ்குமார் ஜவுளி எடுப்பதற்காக தென்காசிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ராமச்சந்திரபட்டணம் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப முயன்ற போது எதிரே வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று ராஜேஷ்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.