ஆந்திர மாநில பிரதேசத்தின் கடந்த போர் மாவட்டத்தில், கர்நாடகா எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஒரு சிறிய ஆனால் அதிசயமான கிராமம் லேபாக்ஷி. இந்த கிராமத்தில் அமைந்துள்ள லேபாக்ஷி வீரபத்திரர் திருக்கோயில், உலகில் எங்கும் காண முடியாத பல அதிசயங்களை தன்னுள் கொண்டுள்ளது. ஆன்மீகத்தையும் வரலாற்றுச் சிறப்பையும் ஒருங்கே கொண்ட இந்த ஆலயம், தேசமெங்கும் இருந்து பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது.
லேபாக்ஷி என்ற பெயரின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான ராமாயணக் கதை உள்ளது. ராவணன் சீதா தேவியைக் கடத்திச் சென்றபோது, ஜடாயுதாஎன்ற பருந்து ராவணனுடன் சண்டையிட்டு காயமடைந்து விழுந்தது. ராமன் அங்கே வந்தபோது, விழுந்த பறவையைப் பார்த்து தெலுங்கு மொழியில் “லே பாக்ஷி” என்று கூறினார், இதற்கு “எழு பறவையே” என்று பொருள்.
ஜடாயுதா விழுந்த அந்த இடம் மற்றும் சீதா தேவியின் பாதக் தடம் இன்றும் இந்தக் கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் சீதா தேவியின் பாதத்தில் எப்போதும் தண்ணீர் சுரந்து கொண்டே இருப்பது ஒரு பெரும் அதிசயமாகும்.வீரபத்திர சுவாமி கோயிலின் மிக முக்கியமான ஈர்ப்புகளில் ஒன்று, இங்கு அமைந்துள்ள பிரம்மாண்டமான நந்தி சிலை. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நந்தி சிலைகளில் இதுவும் ஒன்றாகும்.
சுமார் 20 அடி அகலமும், 30 அடி நீளமும் கொண்ட இந்த நந்தி, ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரே கல்லில் செய்யப்பட்ட பிள்ளையார் சிலையும் இங்கு உள்ளது. உலகின் மிக முக்கிய ஈர்ப்பாக ஏழு தலை நாக லிங்கமும் இங்கு இடம் பெற்றுள்ளது, இது வேறு எங்கும் காண முடியாத ஒரு அதிசயம்.
இந்தக் கோயிலின் கட்டிடக்கலை அதிசயங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது, கல்மண்டபத்தில் உள்ள தொங்கும் தூண். மொத்தம் 70 தூண்கள் கொண்ட இந்த மண்டபத்தில், ஒரு தூண் மட்டும் தரையைத் தொடாமல் அந்தரத்தில் தொங்கியபடி உள்ளது. தரைக்கும் தூணுக்கும் சில அடி தூரம் இருப்பதால், அதன் இடையில் ஒரு துணியைக் கூட நுழைக்க முடியாது.
View this post on Instagram
“>
இந்தத் தூணை மக்கள் ஆச்சரியமாகவும், ஒரு அதிசயமாகவும் பார்க்கிறார்கள். லேபாக்ஷி வீரபத்திரர் திருக்கோயில், அதன் ஆன்மீக மகிமையாலும், கட்டிடக்கலை அதிசயங்களாலும் இந்திய கலாச்சாரத்தின் ஒரு முக்கியஅடையாளமாகத் திகழ்கிறது.
