தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உலக பிரசித்தி பெற்ற பணிமய மாதா கோவிலின் திருத்தேர் விழா வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். அதனால் இந்த விழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பை கருதி வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.