மதுரை மாவட்டத்திலுள்ள பீ.பி குளம் வைகை மூவேந்தர் நகரில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பால்ராஜ் என்ற நண்பர் உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று இருவரும் முல்லை நகரில் இருக்கும் மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது ரஞ்சித் குமாரிடம் மது வாங்குவதற்காக பால்ராஜ் பணம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு ரஞ்சித் குமார் தன்னிடம் பணம் இல்லை என கூறினார்.

இதனால் கோபமடைந்த பால்ராஜ் அருகே ஹோட்டலில் இருந்த கொதிக்கும் எண்ணெயை எடுத்து ரஞ்சித் குமார் மீது ஊற்றினார். இதனால் படுகாயமடைந்த ரஞ்சித்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பால்ராஜை கைது செய்தனர்.