சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் காந்திநகர் அறிஞர் அண்ணா முதல் தெருவில் அந்தோணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு அருள் ஆனந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மதுரவாயலில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலிருந்த அருள் ஆனந்த் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருள் ஆனந்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் அருள் ஆனந்த் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.