தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கே.வேட்ரப்பட்டி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கட்ராமன் பெற்றோரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றார். இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த வெங்கட்ராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கட்ராமனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.