புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பூதன் வளவு கிராமத்தில் அடைக்கன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சரசு என்ற மனைவி உள்ளார். இவர்கள் விவசாயம் செய்து வருவதோடு வீட்டில் ஆடுகளையும் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் சரசு வளர்த்து வந்த ஆடு வழக்கத்திற்கு மாறாக 5 குட்டிகளை ஈன்றது. அந்த ஐந்து குட்டிகளும் ஆரோக்கியமாக இருக்கிறது. இதனை அறிந்த கிராம மக்கள் ஆட்டுக்குட்டிகளை ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.