விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.மருதூர் பகுதியில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதகடிப்பட்டில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு 2 1/2 வயதில் ரக்சன் ராம் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் அய்யனாரின் அண்ணன் முருகன் அவர்களது பூர்வீக வீட்டில் குடியிருந்து வருகிறார்.

அதில் பங்கு தருமாறு அய்யனார் கேட்டதற்கு முருகன் மறுப்பு தெரிவித்தார். இதனால் மன உளைச்சலில் அய்யனார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அய்யனாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.