விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அதே பகுதியைச் சேர்ந்த தரணிதரன் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தரணிதரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.