விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொடியம் கிராமத்தில் கமல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் எம்.பார்ம் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கமலின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலையில் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு கமல் பேசினார்.

மறுமுனையில் பேசிய நபர் கூறியதை நம்பி கமல் 18 லட்சத்து 16 ஆயிரத்து 630 ரூபாய் பணத்தை முதலீடு செய்தார். ஆனால் கூறியபடி அவருக்கு லாபம் கிடைக்கவில்லை. பணமும் திரும்ப வரவில்லை. இதுகுறித்து கமல் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.