டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில், பாரம்பரிய மணமகன் மற்றும் மணப்பெண் அலங்காரத்தில் கலந்துகொண்ட இளம்பெண் ஒருவர் தற்போது தேசிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சிவப்பு நிற லெஹங்கா, முழுமையான மணப்பெண் நகைகள் மற்றும் ஒப்பனையுடன் ஆர்ப்பாட்டக் களத்திற்கு வருகை தந்த அந்த மாணவி, கல்வித்துறையின் தற்போதைய அவல நிலையைச் சுட்டிக்காட்டும் வகையில் நூதன முறையில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். அவரது இந்த வித்தியாசமான போராட்டம் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி ஒரு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
A bride literally paused her wedding to join the protest! 😭👰♀️
Placard reads: “RIP Career, Here I Come” & “Kuchu Puchu, ab toh resign krdo” 💀
Dharmendra Pradhan ji, maan jao bhai… warna ye Gen Z aapki Beti ki shaadi me bhi aakar ‘Resign’ ke naare lagwayegi! 😂🔥📉… pic.twitter.com/T54JDpmJMg— CommonMan659 (@DheeraKL) July 25, 2026
தனது கைகளில் ஏந்தியிருந்த பதாகைகளில் இப்போது ஆட்சியா அல்லது ராஜினாமாவா?” போன்ற வாசகங்களை எழுதியிருந்த அவர், தான் ஒரு முன்னாள் நீட் மாணவி என்று தெரிவித்தார். கடுமையான உழைப்பைக் கொட்டிப் படித்தாலும் தேர்வுகளில் தொடரும் முறைகேடுகளாலும் நிச்சயமற்ற தன்மையாலும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதாக அவர் வேதனை தெரிவித்தார். பெற்றோர்கள் தங்களை எவ்வளவுதான் படிக்க வைத்தாலும், முறையான எதிர்காலம் அமையாத சூழலில் திருமணம் செய்துகொள்வதே ஒரே வழியாக மாறி வருவதாகக் கூறி அவர் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டனங்களைப் பதிவு செய்தார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்த நூதனப் போராட்டத்தில் பங்கேற்கத் தனது பெற்றோரே முழு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தியதாகவும், பேசப்பட்டு வரும் இந்த மணப்பெண் மாணவியின் போராட்டம், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான மாணவர்களின் குமுறலையும் மனவேதனையையும் வெளிப்படுத்தும் குறியீடாக மாறியுள்ளது.
