திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆர்.எம்.எஸ் காலனியில் பாரதி கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் இடை தரகராக வேலை பார்த்து வருகிறார். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் நியூ லைட் ட்ராவல்ஸ் என்று நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பாரதி கண்ணன் 24 பேருக்கும் விசா பெற்ற தருமாறு கூறி சுப்பிரமணியனிடம் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.

அதன் பிறகு சுப்பிரமணியன் அவர்களுக்கு போலி விசாவை வழங்கியதாக தெரிகிறது. இதனை கண்டுபிடித்த பாரதி கண்ணன் பணத்தை தருமாறு கேட்டதற்கு சுப்பிரமணியன் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை மட்டும் கொடுத்தார். மீதமுள்ள பணத்தை தரவில்லை. இதுகுறித்து பாரதி கண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.