கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி விஷ்வந்தபுரத்தில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனோகரனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இருந்த லிங்க் மூலம் மனோகரன் தனது விபரங்களை பதிவு செய்தார்.

இதனையடுத்து மனோரனை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் குறைந்த அளவு முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறினார். இதை நம்பி மனோகரன் 9 லட்சத்து 20 ஆயிரத்து 408 ரூபாய் முதலீடு செய்தார். ஆனால் கூறியபடி அவருக்கு பணம் வரவில்லை. லாபத்தொகையும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மனோகரன் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.