விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் மணிகண்ட பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி இரவு மணிகண்ட பிரபு பாப்பாரப்பட்டி சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மணிகண்ட பிரபு மதுரையில் இருக்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு பரிசோதனை செய்ததில் மணிகண்ட பிரபு மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்தனர். இதனால் நேற்று மணிகண்ட பிரபுவின் உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து எடுக்கப்பட்டது. மணிகண்ட பிரபுவின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேர் மறுவாழ்வு பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.