கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோட்டுபட்டியில் கூலி வேலை பார்க்கும் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா(26) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்து பத்து மாதமே ஆன பெண் குழந்தை இருக்கிறது. தற்போது சத்யா குண்டியால்நத்தம் கிராமத்தில் இருக்கும் பெற்றோர் வீட்டில் இருந்தார்.

இந்நிலையில் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்ட சத்யா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிறு வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சத்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.