சுற்றுலா பயணிகளை குறி வைத்து…. 3 பேர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கையில் பையுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை சுற்றி…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து….. டிரைவர், கண்டக்டர் உள்பட 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஸ்ரீதர் பாண்டி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பேருந்தில் 30 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் மா. மூ. கோவிலூர் பிரிவு அருகே சென்ற…

Read more

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்…. ஜல்லிக்கட்டு வீரர் படுகொலை…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லப்பட்டி பகுதியில் இருக்கும் செயல்படாத கல்குவாரி குட்டையில் ஆணின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் 4 மணிநேர…

Read more

சாலையில் கவிழ்ந்த சரக்கு லாரி…. உதவியாளர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஆஸ்பெஸ்டாஸ் ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி வாடிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சதீஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மேலும் உதவியாளராக சோலை என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் பஞ்சம்பட்டி பிரிவு அருகே…

Read more

தென் மாநில அளவிலான போட்டி…. திண்டுக்கல் கல்லூரி மாணவி சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!

தென் மாநில அளவிலான குத்துசண்டை போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்றுள்ளது. இதில் தமிழக அணி சார்பில் 60 கிலோ எடை பிரிவில் திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரி மாணவி கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கம் வென்றார். இந்த மாணவியை திண்டுக்கல் மாவட்ட கைப்பந்து…

Read more

ஆடு மேய்ந்ததால் தகராறு…. விவசாயி உள்பட 5 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 27-ஆம் தேதி ஆறுமுகம் வளர்க்கும் ஆடு அதே பகுதியில் வசிக்கும் பார்த்தசாரதி என்பவரது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. இதனால் கோபமடைந்த பார்த்தசாரதி…

Read more

விளையாடி கொண்டிருந்த சிறுவன்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்கு ஆயக்குடியில் டெய்லரான பிரபு என்பது வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு லோகேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரபு வேலை நிமித்தமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தேவராயபுரத்தில் இருக்கும்…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்த டயர்…. சாலையில் கவிழ்ந்த மினிலாரி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து வெங்காயம் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கார்த்திக் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோபால்பட்டி கூட்டுறவு வங்கி அருகே சென்றபோது மினி லாரியின் பின்பக்க டயர்…

Read more

காணாமல் போன சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் ஆட்டோ டிரைவராக வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வருண்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை…

Read more

“போதிய வருமானம் இல்லை”…. 3 மகள்களை தவிக்க விட்டு பெண் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.மேட்டுப்பட்டி பகுதியில் சர்வேஸ்வரன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலக்கோட்டை பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு லட்சுமி(39) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

ரூ.6 1/2 கோடி மோசடி…. 9 பேர் மீது வழக்குபதிவு…. தம்பதியை கைது செய்த போலீஸ்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குரும்பபட்டியில் நல்லதம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பூதிபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தீபாவளிச்சிட்டு மற்றும் ஏலசீட்டு நடத்தி வந்துள்ளார். அவருக்கு அவரது மகள் சுகன்யா,…

Read more

பொய் வழக்கு போட்டார்களா…? மகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் ஒரு பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது மகள் மீது பெட்ரோலை…

Read more

3 குழந்தைகளை தவிக்க விட்டு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமா (24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூமா தூக்கிட்டு…

Read more

காதலனை கரம்பிடித்த இளம்பெண்…. பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் பானுப்பிரியா(21) என்பவர் வசித்து வருகிறார். இவரும் கொல்லப்பட்டியைச் சேர்ந்த மில் தொழிலாளி அஸ்வின் குமார்(22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு…

Read more

ஓட ஓட விரட்டி கடித்த வெறி நாய்கள்….காயமடைந்த 7 பேர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி, ரெண்டலப்பாறை உள்ளிட்ட கிராமங்களுக்குள் வெறிநாய்கள் நுழைந்துவிட்டது. இந்த நாய்கள் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை ஓட ஓட விரட்டி கடித்தது. இதனால் வேடப்பட்டியை சேர்ந்த கதிர்வேல், ரெட்டியபட்டியைச் சேர்ந்த திருமூர்த்தி, ரெண்டலபாறையை…

Read more

தீப்பிடித்து எரிந்த கார்…. துரிதமாக செயல்பட்ட பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லப்பட்டியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி பண்ணை வைத்துள்ளார். நேற்று ஜெயக்குமார் வடமதுரை மேற்கு ரத வீதியில் காரை நிறுத்திவிட்டு பண்ணைக்கு சென்றுள்ளார். மதியம் 2 மணி அளவில் திடீரென காரின் முன்பகுதி தீப்பிடித்து…

Read more

பழனி குடமுழுக்கு விழா: இன்று(ஜன.,27) திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு…!!!

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று (ஜனவரி 27ஆம் தேதி) திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி கோயில் குடமுழுக்கு நடைபெறுவதால் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…

Read more

வடைக்குள் இருந்த “ஈ”…. டீக்கடைக்காரருக்கு அபராதம்…. அதிரடி காட்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலக சாலையில் ஒரு டீ கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு காலை நேரம் சென்ற ஒருவர் வடையை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வடைக்குள் ஈ இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர் டீக்கடைக்காரரிடம் காண்பித்து…

Read more

மலைப்பாதையில் கவிழ்ந்த பேருந்து…. காயமடைந்த 15 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை “குட்டி கொடைக்கானல்” என அழைக்கப்படுகிறது. இங்கு இருக்கும் 15-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் மா, பலா, வாழை, மிளகு உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து…

Read more

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கல்..!!!

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் வருகின்ற 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 16 வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக…

Read more

இந்த மாவட்டத்தில் ஜனவரி 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் தை மாதம் முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். அதேசமயம் இந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற உள்ளதால் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய கும்பாபிஷேகம் பழனியில் வருகின்ற…

Read more

பழனி கும்பாபிஷேக விழா – ஜன.,27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை..!!

பழனி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜனவரி 27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி கோயில் குடமுழுக்கு நடைபெறும் 27 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து…

Read more

“துணிவு படம் பார்த்து வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி”…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை அமைந்துள்ளது. இந்த வங்கி இன்று காலை வழக்கம் போல் 10 மணிக்கு செயல்பட தொடங்கி நிலையில் ஒரு வாலிபர் கையில் ஸ்பிரே, கத்தி, கட்டிங் பிளேடு போன்றவைகளுடன் வங்கிக்குள்…

Read more

“அந்த” வேலை பிடிக்கவில்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வில்பட்டி ஐந்து வீடு பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கள்ளக்குறிச்சியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அஜித்குமாருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சொந்த ஊருக்கு திரும்பி வந்த அஜித்குமார்…

Read more

டார்ச் லைட் கட்டிக்கொண்டு நின்ற நபர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யலூர் சங்கிலி கரடு வனப்பகுதியில் வனவர் கார்த்திகேயன், வனக்காப்பாளர்கள் சவேரியார், ஆண்டி ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தலையில் டார்ச் லைட் கட்டியவாறு சுற்றித்திரிந்த நபரை வனத்துறையினர் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்…

Read more

17 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குளம்…. மகிழ்ச்சியில் கிராம மக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாமரைபாடியில் 120 ஏக்கர் பரப்பளவு உடைய மந்தை பெரியகுளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் தேங்கும் தண்ணீரால் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 150 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் பயன்பெறும். கடந்த 17 ஆண்டுகளாக வாய்க்கால்கள் முறையாக பராமரிக்கப்படாததால்…

Read more

பெட்ரோல் நிரப்பிய பிறகு தீ விபத்து…. சாதூர்யமாக செயல்பட்ட நபர்கள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் தோப்புப்பட்டி பகுதியில் வேன் டிரைவராக மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான நாகேந்திரன், விக்னேஷ் ஆகியோருடன் திண்டுக்கல்-கரூர் சாலையில் ஆயில் மில் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல்…

Read more

சிறுமிக்கு நடந்த கொடுமை…. முதியவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் கூலி வேலை பார்க்கும் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசன் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வடமதுரை அனைத்து மகளிர் காவல்…

Read more

நடுரோட்டில் கவிழ்ந்த அரசு பேருந்து…. கண்டக்டர் உள்பட 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருப்பூரில் இருந்து அரசு பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை குணசேகரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக அருண் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் பேருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சடையாண்டிபுரம் பிரிவு பகுதியில் பேருந்து நள்ளிரவு நேரத்தில்…

Read more

பயங்கர சத்தத்துடன் இடிந்த வீடு…. இந்து முன்னணி நிர்வாகி- மனைவி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரக்கல் கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்ட மேற்கு இந்து முன்னணி பொது செயலாளராக இருக்கிறார். இவர் புல்லுவெட்டி குளம் பகுதியில் இருக்கும் வணிக வளாகத்தில் பட்டாசு கடை நடத்தி வந்துள்ளார். அதே…

Read more

முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்…. 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து…

Read more

3 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. கொடைக்கானலில் அலைமோதிய கூட்டம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டதால் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனையடுத்து நகரின் முக்கிய பகுதிகளான…

Read more

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டு தீ…. பல மணி நேர போராட்டம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையான வெப்பமும், இரவு நேரங்களில் குளிரும் நிலவி வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் பெரும்பள்ளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வடகவுஞ்சி அருகே தனியார் பட்டா நிலங்களில் திடீரென…

Read more

50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள்…. மாநகராட்சி ஆணையரின் உத்தரவு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் இருக்கும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்துமாறு சுகாதார ஆய்வாளர்களுக்கு ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி மாநகர் நல அலுவலர் இந்திரா தலைமையில் சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார்…

Read more

கேரம் போர்டு விளையாடிய நண்பர்கள்…. வாலிபரை தாக்கிய 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுகலராம்பட்டி பகுதியில் பொன்னர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி பொன்னர் தனது நண்பரான தவமணி என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் நாடக மேடை அருகே கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு…

Read more

பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து குடிநீர், குளிர்பானம் விற்பனை செய்ய தடை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாகன் பேசியதாவது, கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள…

Read more

தல” தளபதி” ரசிகர்களின் அசத்தல் பேனர்…. சோஷியல் மீடியாவில் வைரல்…!!!

முன்னணி நடிகர்களான அஜித் நடித்த “துணிவு” திரைப்படமும், “விஜய்” நடித்த வாரிசு திரைப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் ஒரே வளாகத்தில் அடுத்தடுத்து இருக்கும் தியேட்டர்களில் விஜய், அஜித் படங்கள் திரையிடப்படுவதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில்…

Read more

பக்தர்களுக்காக…. பழனி முருகன் கோவிலில்…. ரூ.25 லட்சத்தில் குளிர்சாதன இயந்திரம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வருகிற 27-ஆம் தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் கோவில் நிர்வாகம் சார்பில் வர்ணம் பூசும்பணி, கோவில் திருப்பணி, புனரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.…

Read more

மூதாட்டியின் முகத்தை போர்வையால் முடிய வாலிபர்….. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சி கணவாய் தோட்டத்து பகுதியில் வெள்ளையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு பழனி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது போர்வையால் முக்காடு போட்டு முகத்தை…

Read more

4 வயது சிறுமி கொலை…. சிறுவனுக்கு ஆயுள் தண்டனை…. மதுரை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு…!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் தனது 4 வயது பேத்தியுடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று (14.12.2017) அன்று கொம்பேரிபட்டி-செம்மனபட்டி சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியே 16 வயது சிறுவன் ஒருவன் வந்துள்ளார். மொபட்டில் வந்த அச்சிறுவன் மூதாட்டியையும் அவரின் பேத்தியையும்…

Read more

4 பேரிடம் 17 லட்ச ரூபாய் மோசடி…. ஊர்காவல் படை வீரர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோணப்பட்டி பகுதியில் பட்டதாரியான சங்கப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் மையத்தில் கணினி பயிற்சி பெற்றுள்ளார். அப்போது நண்பர் மூலம் மலவார்பட்டி பகுதியை சேர்ந்த…

Read more

லஞ்சம் வாங்கிய உதவியாளர்….. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரவுண்டு ரோடு பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனம் நடத்த முடிவு செய்து உரிமம் பெறுவதற்காக திண்டுக்கல் தாலுகா அலுவலகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது பணியில் இருந்த உதவியாளர் கணேசன்…

Read more

அடேங்கப்பா….! பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா…?

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் திருவிழா காலங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். கடந்த மாதம் டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் உண்டியல்…

Read more

போதை காளான்களை தேடி சென்ற வாலிபர்கள்…. அடர்ந்த வனப்பகுதியில் 3 நாட்களாக சிக்கி தவிப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியை சேர்ந்த 5 வாலிபர்கள் கடந்த 1- ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு காரில் வந்துள்ளனர். இந்நிலையில் பூண்டி பகுதிக்கு சென்ற வாலிபர்கள் தங்குவதற்கு அறை இல்லாததால் காரியிலேயே தங்கியுள்ளனர். அடுத்த நாளில்…

Read more

பள்ளிக்குள் புகுந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகராட்சி கடை வீதியில் இருக்கும் அரசு நடுநிலை பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாம்பு ஒன்று பள்ளி…

Read more

திருமணம் செய்வதாக கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை….. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லாம்பட்டியில் சீனிவாசன்(20) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு சீனிவாசன் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர்…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த சுற்றுலா வேன்…. ஐயப்ப பக்தர் பலி; 10 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள சக்திசாய் மாவட்டத்தைச் சேர்ந்த 22 ஐயப்ப பக்தர்கள் சுற்றுலா வேனில் சபரிமலைக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று முன்தினம் அவர்கள் மீண்டும் ஆந்திரா நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்த வேனை பிரசாத் என்பவர் ஓட்டி…

Read more

17 வயது சிறுமிக்கு திருமணம்…. வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலையகவுண்டன்பட்டி பகுதியில் ரகுநாத பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரகுநாதபாண்டி 17 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார்…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. பெண் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தாமரைபாடி சாலையூரில் காளியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காளியம்மாள் தாமரைபாடியில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வருவதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டிருந்தார். அவருடன் கோவில்யாகப்பன்பட்டியை சேர்ந்த ராஜா(60), அவரது மகள் பிரியா(38) பேத்தி…

Read more

பழனி முருகன் கோவிலுக்கு சென்ற நண்பர்கள்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டியில் முகேஷ் கண்ணா(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முகேஷ் கண்ணா தனது நண்பரான பூபாலன்(24) என்பவருடன் பழனி முருகன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சாமி கும்பிடுவதற்காக…

Read more

Other Story