திண்டுக்கல் அருகே பெற்றோரின் கண்முன்னே குழந்தைகளை ஏலத்தில் விடுகின்றனர். குழந்தைகளை ரூ.500-50,000 விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். இந்த சம்பவம் குறித்த செய்தியானது வேகமாக பரவியது. இந்நிலையில்  இதன் பின்னணி குறித்து விசாரித்ததில், குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகள் இந்த கோயிலில் வழிபாடு செய்தால் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

அப்படி அவர்களுக்கு இந்த கோவிலில் வந்து வழிபட்ட பிறகு குழந்தை பிறந்தால் அந்த குழந்தையை இதே கோவிலில் 500 முதல் 5000 வரை ஏலம் விட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்களாம். அதன்பிறகு மீண்டும் குழந்தையை வாங்கி செல்வார்களாம்.