திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கும் நிகழ்ச்சியில் செல்போனில் பேசிய பெண்ணை வேடசந்தூர் திமுக எம்எல்ஏ காந்தி ராஜன் திட்டினார். நேற்று விழாவில் எம்எல்ஏ பேசிக்கொண்டிருந்த போது, அவருக்கு முன்பு அமர்ந்திருந்த பெண்களில் ஒருவர் தலையை குனிந்தபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதை கவனித்த காந்தி ராஜன் கோபமடைந்தார்.

இதையடுத்து அவர், ”அம்மா.. அம்மா.. நீங்கள் செல்போனிலெல்போனில் பேசிவிட்டு சாவகாசமாக சொல்றீங்களா.. நான் வேற ஊருக்கு போய்ட்டு வந்து மீண்டும் பேசுறேன். ஏம்மா இந்த மாதிரி அக்கிரமம் பண்ணுறீங்க.. செல்போன் இல்லாத காலத்தில் என்ன செய்தீர்கள்? பொது இடத்தில் வந்தால் ஒரு மரியாதை இருக்க வேண்டும் என கண்டித்தார்.