திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 32 வயது இளம்பெண் ஒருவர் கணவரை பிரிந்து தன்னுடைய 11 வயது மகனுடன் தனியாக வசித்து வருகின்றார். இதனிடையே அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அந்த பெண்ணுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தையை கொன்று வீட்டில் அருகே குழி தோண்டி புதைத்து விட்டதாக புகார் வந்ததை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் குழந்தை புதைக்கப்பட்டதற்கான எந்த ஒரு அடையாளமும் அங்கு இல்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.