அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகர்பாளையம் மேற்கு தெருவில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு அஜித் சாந்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சாந்தி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

கடந்த 24-ஆம் தேதி ரத்த வாந்தி எடுத்த சாந்தியை அஜித்தும், உறவினர்களும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.