மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மதுரையில் மீண்டும் சு.வெங்கடேசன், திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு போட்டியிட்டு வென்ற சு வெங்கடேசன், மதுரை தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். மாநில குழு கூட்டத்தில் சு.வெங்கடேசன், சச்சிதானந்தம் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டதாக கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.