திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19, 17 வயது சகோதரிகள், அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை காதலித்து வந்துள்ளனர். கடந்த 30ஆம் தேதி அவர்கள் நான்கு பேரும் பக்கத்து ஊர் கோயில் திருவிழாவுக்குச் சென்றுள்ளனர். அங்கு சரண்குமார் (21), வினோத்குமார் (26), பிரசன்னகுமார் (25), சூரிய பிரகாஷ் ஆகிய நால்வரும் சேர்ந்து காதலன்களை கட்டிப்போட்டுள்ளனர்.

அதன்பின்னர் அவர்கள் கத்தி முனையில் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.