நடிகர் திலகம் உயிருடன் இருந்திருந்தால், ஸ்டாலின் நடிப்பைப் பார்த்து மயங்கி விழுந்திருப்பார் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். ஈரோடு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “முதல்வர் ஸ்டாலினுக்கு தில் இருந்தால், கடந்த 3 ஆண்டுகளில் கொண்டு வந்தத் திட்டங்கள் குறித்து என்னுடன் விவாதிக்க தயாரா?. இடத்தைச் சொல்லுங்கள். நானே வருகிறேன். ஆன்லைன் ரம்மி நிறுவனத்துடன் கூட பணம் வாங்கிய கட்சி திமுக” என கடுமையாக சாடியுள்ளார்.