தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தனது எஜமானருக்கு போட்டியாக எடப்பாடி பழனிச்சாமியும் பொய்களை சொல்லி வருகிறார், தான் கொடுத்த அழுத்தத்தால் ஆயிரம் ரூபாயை திமுக தருவதாக இபிஎஸ் பொய் பேசி வருவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை முதல்வர் ஸ்டாலின் தந்தார் என்றே மக்கள் சொல்வார்கள். கவுண்டமணி படத்தில் வரும் வசனத்தை நினைவு படுத்தி ஒரு மனுஷன் பொய் சொல்லலாம், ஆனா ஏக்கர் கணக்கா பேசக்கூடாது என விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.