திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார் பட்டி ஊராட்சிக்குட்பட்ட கரியாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஆச்சிமுத்து. விவசாயியான இவருக்கு நான்கு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் மதுரை இவர் நேற்று இரவு சுமார் 12 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது தன்னுடைய பாட்டி மற்றும் தாத்தாவை எழுப்பி சண்டை போட்டுள்ளார். அப்போது தன்னுடைய தாத்தா, பாட்டியிடம் உன்னுடைய மூன்றாவது மகன் அவருடைய மகளுக்கு வெளியூரில் திருமணம் வைத்திருந்தார்.

அந்த பத்திரிகையில் என்னுடைய தந்தை மற்றும் என்னுடைய குடும்பத்தார் பெயர் யாரையும் போடாமல் எப்படி இருக்கலாம் என்று கூறி தகராறு செய்துள்ளார். இதை அடுத்து தகராறு முற்றியதால்  தன்னுடைய தாத்தா பாட்டியை அறிவாளால் சாரா மாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் இந்த பகுதியில் வரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.