திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு திண்டுக்கல்லை சேர்ந்த பக்தர் ராஜசேகரன் என்பவர் 15 லட்சம் மதிப்புள்ள மினி பேருந்தை தானமாக வழங்கி உள்ளார். பாதவிநாயகர் கோவில் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் உதவி ஆணையர் லட்சுமியிடம் பக்தர் ராஜசேகர் வாகனத்தின் சாவி, வாகன உரிம புத்தகத்தை வழங்கினார்.

இதன் மூலம் மினி பேருந்தில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் ரயில் நிலையம், பேருந்து நிலையம், அடிவாரம் படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் பகுதிகளில் ரூ.10 கட்டணத்தில் பக்தர்கள் பயணம் செய்யலாம்.