தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக் குறுகிய காலத்திற்குள் வரலாற்றுச் சிறப்புமிக்க தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளதற்குப் பிரபல நடிகர் சி.பி. சத்யராஜ் தனது நெகிழ்ச்சியான வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ளார்.

தொழில்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை மாநாட்டில், ஒட்டுமொத்தமாக ரூ.67,452 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதோடு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அதிரடி சாதனை தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் ஒரு அற்புதமான தொடக்கம் என்று குறிப்பிட்டுள்ள நடிகர் சத்யராஜ், தமிழக அரசுக்கும் முதல்வர் விஜய்க்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

“>

 

புதிய அரசின் துரிதமான பொருளாதார நடவடிக்கைகளும், தொழில் வளர்ச்சியில் காட்டப்படும் ஈடுபாடும் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.