மகாராஷ்டிரா மாநிலத்தில், தெருநாய் ஒன்று பழ வியாபாரியை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

கரஞ்சா நகரின் டெல்லி வெஸ் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பழ வியாபாரியின் மீது, திடீரெனப் பாய்ந்த வெறிநாய் ஒன்று அவரை உடலின் பல்வேறு இடங்களில் கொடூரமாகக் கடித்துக் குதறியது.

அந்த நாய் தாக்கியபோது, வியாபாரி கையில் இருந்த தடியை வைத்து நாயை அடித்து விரட்டக் கடுமையாகப் போராடினார். இருப்பினும், அந்த நாய் அவரை விடுவிக்காமல் தொடர்ந்து வெறியுடன் தாக்கியபடி இருந்தது.

நாயின் தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்தப் பழ வியாபாரியை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காகக் அருகில் உள்ள அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

“>

 

நகர்ப் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.