திண்டுக்கல் மாவட்டம் பெரியம்மாபட்டி புளியம்பட்டி பிரிவில் மகுடீஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய வீட்டில் எருமை மாடு வளர்த்து வந்த நிலையில் அவர் வளர்த்த எருமை மாடு கன்று ஈன்ற முடியாமல் நீண்ட நேரம் சிரமப்பட்டது. இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று நான்கு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கன்று குட்டியை பிரித்து எடுத்தனர். அந்த கன்று குட்டி இரண்டு தலைகள், ஏழு கால்கள் மற்றும் இரண்டுவால்  என அனைத்தும் ஒட்டிய நிலையில் இருந்ததை கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.