திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான சின்னய்யா  தனது வீட்டின் முன்பு தூங்கிக் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம கும்ப கும்பல் ஒன்று அறிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் வலி தாங்க முடியாமல் சின்னய்யா அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதனைத் தொடர்ந்து சின்னய்யாவை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்ததோடு காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்து நத்தம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக சின்னய்யாவை தாக்கி இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.