மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருந்த பயணிகள் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் 1.85 கோடி மதிப்பிலான தங்கத்தை பேஸ்ட் வடிவில் தங்கள் உடலில் மறைத்து கடத்தியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் இருந்து 3.01 கிலோ எடை தங்கத்தை பறிமுதல் செய்ததோடு கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.