திருப்பூர் மாவட்டம் ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். பெயிண்ட் அடிக்கும் வேலை செய்யும் இவர் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு இரவு உணவை முடித்துவிட்டு வீட்டின் முன்பு திண்ணையில் படுத்து உறங்கி உள்ளார். மறுநாள் காலையில் சந்திரகுமார் திண்ணையில் இருந்து கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அருகே சென்று பார்த்தபோது அவர் மூச்சு பேச்சு இல்லாமல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் சந்திரகுமாரை பரிசோதித்ததில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து  சந்திரகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகமாக மது அருந்தியதுதான் அவரது உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.